/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கட்சி நிர்வாகி மீது மன்சூர் அலிகான் போலீசில் புகார்
/
கட்சி நிர்வாகி மீது மன்சூர் அலிகான் போலீசில் புகார்
கட்சி நிர்வாகி மீது மன்சூர் அலிகான் போலீசில் புகார்
கட்சி நிர்வாகி மீது மன்சூர் அலிகான் போலீசில் புகார்
ADDED : மார் 20, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நுங்கம்பாக்கம்,
கட்சி அலுவலகத்தில் லெட்டர் பேடு உள்ளிட்ட பொருட்கள் திருட்டுப்போனதாக, நடிகர் மன்சூர் அலிகான் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை மன்சூர் அலிகான் நடத்தி வருகிறார்.
இதன் தலைமை அலுவலகம், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ளது.
அலுவலகத்தில் உள்ள லெட்டர் பேடு உள்ளிட்ட பொருட்களை, கட்சியின் பொதுச்செயலர் கண்ணதாசன் என்பவர் திருடிவிட்டதாக, நுங்கம்பாக்கம் போலீசில் மன்சூர் அலிகான் சார்பில் நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
போலீசார் விசாரிக்கின்றனர்.

