/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விழிப்புணர்வு பேரணி நடத்திய போலீசார்
/
விழிப்புணர்வு பேரணி நடத்திய போலீசார்
ADDED : நவ 05, 2025 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி: செம்மஞ்சேரி காவல் நிலையம் சார்பில், நேற்று சுனாமி நகரில் போதை விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், பள்ளி மாணவ - மாணவியர், நலச்சங்கத்தினர் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கோஷம் எழுப்பினர்.
வழியில் உள்ள கடைகளில், போதை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என, கடை உரிமையாளர்களிடம் வலியுறுத்தினர்.
மேலும், யாராவது வீட்டிலோ, கடையிலோ போதை பொருட்கள் விற்றால், தகவல் தெரிவிக்க வேண்டும் என, பங்கேற்றோரிடம் போலீசார் அறிவுறுத்தினர்.

