sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆங்கில வழி கல்வி ஆசை  சிறுவனுக்கு போலீசார் உதவி

/

ஆங்கில வழி கல்வி ஆசை  சிறுவனுக்கு போலீசார் உதவி

ஆங்கில வழி கல்வி ஆசை  சிறுவனுக்கு போலீசார் உதவி

ஆங்கில வழி கல்வி ஆசை  சிறுவனுக்கு போலீசார் உதவி


ADDED : நவ 05, 2025 01:29 AM

Google News

ADDED : நவ 05, 2025 01:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி: ஆவடியில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு, அவரது ஆசைப்படியே தனியார் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் போலீசார் சேர்த்து விட்டது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அடுத்த சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி, 55. இவரது பேரன் ஹரீஷ், 14. கடந்தாண்டு வரை மஹாராஷ்டிராவில் பெற்றோருடன் வசித்து வந்த ஹரீஷ், அங்கு ஹிந்தி வழிக்கல்வி பயின்று வந்துள்ளார்.

பெற்றோர் பிரிந்த நிலையில், தற்போது பாட்டியுடன் தங்கி அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். ஏற்கனவே, ஹிந்தி வழியில் கல்வி கற்ற ஹரிஷ், திடீரென தமிழ்வழியில் படிக்க சிரமப்பட்டார்.

இதனால், போலீஸ் கமிஷனர் சங்கரை நேரில் சந்தித்து, ஆங்கில வழியில் கல்வி கற்க உதவி செய்யுமாறு ஹரீஷ், கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது ஆர்வத்தை பாராட்டிய கமிஷனர் சங்கர், சிறுவனின் ஆசைப்படியே, பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு வழியாக ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில், நேற்று சேர்த்து விட்டார்.

சிறுவனுக்கு தேவையான புத்தகங்கள், சீருடை மற்றும் வீட்டிற்கு தேவையான காஸ் ஸ்டவ், சிலிண்டர் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்தார். பின், கமிஷனர் சங்கர் சிறுவனை அழைத்து, நன்றாக படிக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.

சிறுவனின் ஆர்வத்தையும், கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டரின் செயலையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us