/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரவுடி சீசிங் ராஜா தொடர்புடைய 4 இடங்களில் போலீஸ் 'ரெய்டு'
/
ரவுடி சீசிங் ராஜா தொடர்புடைய 4 இடங்களில் போலீஸ் 'ரெய்டு'
ரவுடி சீசிங் ராஜா தொடர்புடைய 4 இடங்களில் போலீஸ் 'ரெய்டு'
ரவுடி சீசிங் ராஜா தொடர்புடைய 4 இடங்களில் போலீஸ் 'ரெய்டு'
ADDED : டிச 12, 2024 12:26 AM
தாம்பரம்,
கிழக்கு தாம்பரம், ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா என்ற சீசிங் ராஜா, 51; ரவுடி. ஆறு கொலைகள், ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, கொலை முயற்சி என, 39க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன.
இவர் மீது, ஆயுத தடை சட்டத்திலும் வழக்கு பதிவாகியிருந்தது. சமீபத்தில், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சேலையூர் அடுத்த அகரம்தென் பகுதியில் 1.18 ஏக்கர் அரசு நிலத்தை போலி ஆவணங்கள் வாயிலாக அபகரித்து, வேறு நபர்களுக்கு விற்க, சிலர் முயற்சித்துள்ளனர்.
அந்த நிலத்தை அபகரிக்க சீசிங் ராஜாவும், அவரின் கூட்டாளிகளும் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக, நவ., 19ம் தேதி, சீசிங் ராஜா மனைவியர், அவரின் கூட்டாளிகள், உறவினர்கள் வீடுகளில், வருவாய் துறையினர் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில், பல சொத்து ஆவணங்கள், நில வரைபடங்கள், போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், போலி ஆவணங்கள் தொடர்பாக, சீசிங் ராஜா தொடர்புடைய வண்டலுார், கிளாம்பாக்கம், தாம்பரம், இரும்புலியூர் ஆகிய நான்கு இடங்களில், நான்கு ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர், வருவாய் துறையினர் உதவியுடன், நேற்று சோதனை நடத்தினர்.