sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயிலில் ரகளை செய்தால் 10 ஆண்டு சிறை மாணவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

/

ரயிலில் ரகளை செய்தால் 10 ஆண்டு சிறை மாணவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

ரயிலில் ரகளை செய்தால் 10 ஆண்டு சிறை மாணவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

ரயிலில் ரகளை செய்தால் 10 ஆண்டு சிறை மாணவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை


ADDED : அக் 09, 2024 12:25 AM

Google News

ADDED : அக் 09, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, 'ரயில்களில் ரகளை செய்யும் மாணவர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்' என, தமிழக ரயில்வே போலீசார் எச்சரித்துஉள்ளனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, கடந்த 4ம் தேதி, நடந்து சென்று கொண்டிருந்த மாநில கல்லுாரி மாணவர் சுந்தரை, பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் ஈஸ்வர், ஹரிபிரசாத், கமலேஸ்வரன், ஆல்பர்ட், யுவராஜ் ஆகியோர் கொடூரமாக தாக்கினர்.

இதில், படுகாயமடைந்த சுந்தர், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில், ரயில்வே போலீசார், ஐந்து மாணவர்களை கைது செய்தனர்.

இந்நிலையில், வரும் காலங்களில் கல்லுாரி மாணவர்கள் மோதலில் ஈடுபடாமல் இருக்கும் வகையில், ரயில்வே போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழக ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி.,க்கள் ரமேஷ், கர்ணன் ஆகியோர் நேற்று அளித்த பேட்டி:

ரயில்களில் மோதலில் ஈடுபடக்கூடாது என, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக வலியுறுத்தி வருகிறோம். கல்லுாரி நிர்வாகத்திடம் பேசி, மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது, 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இருந்தும், மாணவர்களின் மோதல்கள் தொடர்கின்றன.

எனவே, மோதலில் ஈடுபடும் மாணவர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் வகையில், கடும் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும். தொடர்ந்து மோதலில் ஈடுபடும் மாணவர்கள் பட்டியலை சேகரித்து வருகிறோம். தற்போதைய புதிய சட்டங்களின்படி, டிஜிட்டல் ஆதாரங்கள் இருந்தாலே, சம்பந்தப்பட்ட மாணவர்களின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

ரயில் நிலையங்கள் முழுதும், 'சிசிடிவி' கேமராக்கள் இருப்பதால், பிரச்னைகளில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை அடிப்படையாக வைத்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us