sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மூளையில் ரத்தக்கசிவு போலீஸ்காரர் பலி

/

மூளையில் ரத்தக்கசிவு போலீஸ்காரர் பலி

மூளையில் ரத்தக்கசிவு போலீஸ்காரர் பலி

மூளையில் ரத்தக்கசிவு போலீஸ்காரர் பலி


ADDED : செப் 08, 2025 06:21 AM

Google News

ADDED : செப் 08, 2025 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிமலை:: மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர் உயிரிழந்தார்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ்பாபு, 28; தி.நகர் காவல் மண்டலத்தில், ரவுடி தடுப்பு நுண்ணறிவு பிரிவில், போலீஸ் காரராக பணிபுரிந்தார்.

பரங்கிமலை, மாங்காளியம்மன் கோவில் தெருவில் வீடு எடுத்து, ஐந்து போலீஸ்காரர்களுடன் தங்கியிருந்த சதீஷ்பாபுவுக்கு, இம்மாதம் 2ம் தேதி திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.

அறையில் தங்கியிருந்த நண்பர்கள், கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு, நடந்த பரிசோதனையில் பக்கவாத பாதிப்பால், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு இறந்தார்.






      Dinamalar
      Follow us