sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதை நபர் ஓட்டிய கார் மோதி பெண் போலீசுக்கு எலும்பு முறிவு

/

போதை நபர் ஓட்டிய கார் மோதி பெண் போலீசுக்கு எலும்பு முறிவு

போதை நபர் ஓட்டிய கார் மோதி பெண் போலீசுக்கு எலும்பு முறிவு

போதை நபர் ஓட்டிய கார் மோதி பெண் போலீசுக்கு எலும்பு முறிவு


ADDED : அக் 15, 2024 12:42 AM

Google News

ADDED : அக் 15, 2024 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயம்பேடு, மது போதையில், கார் ேஷாரூம் மேலாளர் ஓட்டி வந்த கார் மோதி, போக்குவரத்து பெண் போலீஸ் காயமடைந்தார்.

வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லோகேஸ்வரி, 23. இவர், கோயம்பேடு போக்குவரத்து காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

நேற்று காலை, கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது, 100 அடி சாலை கேம்ஸ் வில்லேஜ் குடியிருப்பு சிக்னல் அருகே நின்றார்.

அப்போது, வேகமாக வந்த ஹோண்டா சிட்டி கார் ஒன்று, போக்குவரத்து போலீஸ் பூத் மீது மோதி, லோகேஸ்வரி மீதும் மோதியது. இதில் லோகேஸ்வரிக்கு, வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அங்கிருந்தோர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, கோயம்பேடு போக்குவரத்து போலீசார் விசாரித்தனர்.

இதில், விபத்து ஏற்படுத்தியது, மாருதி கார் ேஷாரூமில் மேலாளராக பணிபுரியும், அடையாறு ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த நந்தகுமார், 29, என தெரிந்தது. மது போதையில் இருந்த நந்தகுமாரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us