sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புரோகிதரை மிரட்டி தங்க நகை பறிப்பு

/

புரோகிதரை மிரட்டி தங்க நகை பறிப்பு

புரோகிதரை மிரட்டி தங்க நகை பறிப்பு

புரோகிதரை மிரட்டி தங்க நகை பறிப்பு


ADDED : ஆக 22, 2025 12:16 AM

Google News

ADDED : ஆக 22, 2025 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.ஜி.ஆர்., நகர்: எம்.ஜி.ஆர்., நகர், சீத்தலை சாத்தனார் குறுக்கு தெருவில், வீட்டில் தனியாக வசிப்பவர் அனில்குமார், 61; புரோகிதர். இவருக்கு பழக்கமான 'பைக் டாக்ஸி' ஓட்டுநரான டேவிட் இளவரசன், 23, தன் நண்பர்களுடன் அனில்குமார் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார்.

அனில்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 10 கிராம் தங்க செயின் மற்றும் 3.75 கிராம் மோதிரங்களை பறித்துச் சென்றனர்.

விசாரித்த போலீசார், அயனாவரம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த டேவிட் இளவரசன் என்பவரை கைது செய்தனர்; நகைகளையும் மீட்டனர்.

--

தொழிலாளி பலி

லாரி ஓட்டுநர் கைது

அண்ணா நகர்: மணலியைச் சேர்ந்த பாண்டியன், 48, கூடலிங்கம், 59, ஆகியோர், இம்மாதம் 19ம் தேதி இரவு, 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் அசோக் பில்லரை நோக்கி சென்றனர்.

திருமங்கலம் மேம்பாலத்தில் செல்லும்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரி, முந்தி செல்ல முயன்று பாண்டியனின் ஸ்கூட்டரில் மோதியது. இதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி, கூடலிங்கம் சம்பவ இடத்திலே பலியானார்; பாண்டியன் பலத்த காயமடைந்தார். அண்ணா நகர் போலீார் விசாரித்து, லாரி ஓட்டி விபத்து ஏற்படுத்திய செங்குன்றம், அலமாதியைச் சேர்ந்த கோவிந்தராஜன், 46, என்பவரை நேற்று கைது செய்தனர்.

--

மொபைல் பறித்த

சிறுவன் கைது

அயனாவரம்: அயனாவரம் புதுநகரைச் சேர்ந்த ரச்சிதா, 18; திருநங்கை. கடந்த மாதம் 21ம் தேதி, அதே பகுதியில் நடந்து சென்றபோது, ரச்சிதாவை வழிமறிந்த சிறுவர்கள், அவரது மொபைல் போனை பறித்தனர். சிறுவர்களை கண்டுபிடித்து மொபைல் போனை கேட்ட ரச்சிதாவின் நண்பர் முருகனை, பீர்பாட்டிலால் தாக்கினர்.

இந்த வழக்கில், 14 வயது சிறுவனை போலீசார் ஏற்கனவே கைது செய்து, சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவனை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

--

மீனவருக்கு மிரட்டல்

விடுத்தவர் கைது

பட்டினம்பாக்கம்: பட்டினப்பாக்கம், முள்ளிமா நகரில் வசிப்பவர் பிரபு, 38; மீனவர் மற்றும் கார் ஓட்டுநர். நேற்று முன்தினம் மதியம், 'மீனவன் மெஸ்' உணவகம் எதிரே மணற்பரப்பில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சுரேஷ்குமார், மீன் வலைகளை திருட வந்தாயா என பிரபுவிடம் கேட்டதால், இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார், அங்கு கிடந்த உருட்டு கட்டையால் பிரபுவை தாக்கி, கொலை மிரட்டலும் விடுத்தார். பிரபு புகாரின்படி, பட்டினப்பாக்கம் போலீசார், சுரேஷ்குமாரை நேற்று கைது செய்தனர்.

--

வாலிபரை வெட்டிய

கும்பலுக்கு வலை

வானகரம்: வானகரம், சுங்கச்சாவடி அணுகு சாலையில் உள்ள, தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிபவர் அஜித், 30.

நேற்று முன்தினம் பணி முடிந்து, மதுரவாயல் ஜானகி நகரில் உள்ள தன் வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கும்பல், அஜித்தை கத்தியால் வெட்டி, தப்பிச் சென்றது. அவ்வழியே சென்றோர் அஜித்தை மீட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். வானகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

--

நண்பனின் முகத்தில்

வெட்டியவர் கைது

கண்ணகி நகர்: கண்ணகி நகர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தோர் சுரேஷ், 39, வசந்த், 38. நண்பர்களான இருவரும், நேற்று அதே பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தனர். போதையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த வசந்த், மறைத்து வைத்திருந்த கத்தியால் சுரேஷ் முகத்தில் சரமாரியாக வெட்டினார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுரேஷுக்கு, 10 தையல் போடப்பட்டது. கண்ணகி நகர் போலீசார், வசந்தை கைது செய்தனர்

--

எலக்ட்ரீஷியனிடம்

பணம் பறிப்பு?

தரமணி: ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிலித்தேஷ் கருமாளி, 26. தரமணியில் தங்கி, அங்குள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிகிறார்.

இவர், நேற்று முன்தினம் இரவு, தரமணி 100 அடி சாலையில் நடந்து சென்றபோது இருவர் வழிமறித்து, 'கூகுள் பே' செயலி மூலம், 45,000 ரூபாய் பறித்ததாக, தரமணி போலீசில் கூறினார். போலீசார், அவர் கூறிய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என தெரியவந்தது. எனினும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us