/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிப்பறையில் பேராசிரியர் மர்ம சாவு
/
கழிப்பறையில் பேராசிரியர் மர்ம சாவு
ADDED : டிச 24, 2024 01:20 AM
மதுரவாயல்: உ.பி., மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகார் குமார் கார்வர், 32. இவர், குன்றத்துாரில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், உ.பி.,யில் உள்ள இவரது மனைவி ஹகன்ஷா, நேற்று முன்தினம் இரவு பிரகார் குமார் கார்வரை மொபைல் போனில் தொடர்பு கொண்டார். அதனால், மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மதுரவாயல் போலீசார் சென்ற போது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் பின்பக்கம் உள்ள பால்கனி கதவு திறந்த நிலையில் இருந்தது. அவ்வழியாக உள்ளே சென்று பார்த்த போது கழிப்பறையில், பிரகார் குமார் கார்வர் தலையில் பிளாஸ்டிக் கவர் மாட்டப்பட்ட நிலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.