/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரும் 30க்குள் சொத்துவரி ரூ.5,000 ஊக்கத்தொகை
/
வரும் 30க்குள் சொத்துவரி ரூ.5,000 ஊக்கத்தொகை
ADDED : ஏப் 06, 2025 12:30 AM
சென்னை,
சொத்துவரியை, 30ம் தேதிக்குள் செலுத்தி ஊக்கத்தொகை பெற மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாநகராட்சிக்கு சொத்துவரியானது பிரதான வருவாய். இதன் வாயிலாகவே, மாநகருக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், குப்பை அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் பராமரித்தல், பொது சுகாதார நோய்தடுப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி, ஒவ்வொரு அரையாண்டு துவக்கத்தில் முதல் 30 தினங்களுக்குள் சொத்துவரியை செலுத்துவோருக்கு நிகர வரியில் இருந்து, 5 சதவீதம் அதிகபட்சம் 5,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். எனவே, வரும் 30ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தி, ஊக்கத்தொகையை பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.