/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்னை தாக்கிய ரவுடிக்கு 'காப்பு'
/
பெண்னை தாக்கிய ரவுடிக்கு 'காப்பு'
ADDED : பிப் 04, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயனாவரம்,: வீண் தகராறு செய்து, பெண் துாய்மை பணியாளரை தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
அயனாவரம், கே.கே.,நகரைச் சேர்ந்தவர் செல்வி, 50. இவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளராக பணிபுரிகிறார். செல்வி நேற்று முன்தினம் இரவு, அதேபகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் அருகில் நடந்து சென்றார்.
அப்போது, செல்வியிடம் கே.கே.,நகரைச் சேர்ந்த ரவுடி சூர்யா, 27 என்பவர், போதையில் வீண் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதுகுறித்து புகார் பெயரில், சூர்யாவை அயனாவரம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.