இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒரே மாநிலம் தமிழகம்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒரே மாநிலம் தமிழகம்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
ADDED : ஆக 06, 2025 10:08 AM

சென்னை: நாட்டிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒரே மாநிலம் தமிழகம் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;
* இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழகத்தின் திராவிட மாடல் அரசு.
•இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழகம் முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா.
* அதையும் தாண்டி, தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 11.19% என மத்திய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது.
* இதற்கு முன்பு, இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11ம் ஆண்டில். அப்போது கருணாநிதி ஆட்சி. இப்போது அவர் வழி நடக்கும் திராவிட மாடல் ஆட்சி. இரண்டுமே கழக ஆட்சி.
•2030ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற போது பலரது புருவமும் உயர்ந்தது. இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும்? என்றார்கள். இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.
* எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666)
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

