sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பட்டினப்பாக்கம் - சாந்தோம் சாலையை இரு வழியாக மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

/

பட்டினப்பாக்கம் - சாந்தோம் சாலையை இரு வழியாக மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

பட்டினப்பாக்கம் - சாந்தோம் சாலையை இரு வழியாக மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

பட்டினப்பாக்கம் - சாந்தோம் சாலையை இரு வழியாக மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 04, 2025 12:19 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, பட்டினப்பாக்கம் - சாந்தோம் சாலையை இரு வழிச்சாலையாக மாற்றக்கோரி, மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பட்டினப்பாக்கம் - சாந்தோம் நெடுஞ்சாலையில், இரு வழி வாகன போக்குவரத்தை மீண்டும் அனுமதிக்க வேண்டும். கடல் மற்றும் கடற்கரை பகுதிகளை, மீன்பிடித் தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

மெரினா லுாப் சாலையை, வாகன போக்குவரத்திற்கான சாலை என்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மயிலை பகுதி அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை சார்பில், நொச்சிக்குப்பம் பகுதியில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில், 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து, நெய்தல் மக்கள் கட்சி தலைவர் பாரதி கூறுகையில்,''மீனவர்களின் கோரிக்கையை, தமிழக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், கடலோர பகுதிகளில் அறிவித்துள்ள திட்டங்களை, அரசு திரும்ப பெற வேண்டும்,'' என்றார்.

முள்ளிக்குப்பம் சீனிவாசபுரம் மீனவர்கள் நல சங்க தலைவர் சேகர் கூறுகையில், ''மூன்று அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், தென்சென்னை முழுதும் உள்ள மீனவ மக்களை ஒருங்கிணைத்து, போராட்டம் நடத்துவோம்,'' என்றார்.

★★*






      Dinamalar
      Follow us