/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆட்டோ கட்டண உயர்வு கோரி இரு இடங்களில் போராட்டம்
/
ஆட்டோ கட்டண உயர்வு கோரி இரு இடங்களில் போராட்டம்
ADDED : பிப் 26, 2026 05:34 AM

சென்னை: ஆட்டோ கட்டணம் உயர்வு கோரி, சென்னையில் நேற்று இரண்டு இடங்களில், ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில், ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும், ஆட்டோ செயலியை அரசு துவங்க வேண்டும், பைக் டாக்சிகளை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அண்ணாசாலை, தாராபூர் டவர் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூட்டமைப்பின் பொதுச்செயலர் ஜாஹிர் ஹூசேன் தலைமையில், 200க்கும் மேற்பட்ட ஆட்டோ மீட்டரை கையில் ஏந்தியபடி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், கிண்டியில் உள்ள சாலை போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முன், சி.ஐ.டி.யு., சார்பில் இரண்டவாது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.

