sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பொது// மனைவியின் கள்ளக்காதலனை சரமாரியாக வெட்டி கொன்ற கணவர்

/

பொது// மனைவியின் கள்ளக்காதலனை சரமாரியாக வெட்டி கொன்ற கணவர்

பொது// மனைவியின் கள்ளக்காதலனை சரமாரியாக வெட்டி கொன்ற கணவர்

பொது// மனைவியின் கள்ளக்காதலனை சரமாரியாக வெட்டி கொன்ற கணவர்


ADDED : மே 12, 2025 01:31 AM

Google News

ADDED : மே 12, 2025 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாதவரம்,:மாதவரம் பால்பண்ணை, கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 43; வெல்டர். இவரது மனைவி உமா.

இவர், நேற்று முன்தினம் இரவு, நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் மது அருந்திவிட்டு, அவரது பைக்கில் வீடு திரும்பியுள்ளார். வீட்டின் அருகே சென்றதும், அங்கு மறைந்திருந்த மூவர் சுற்றி வளைத்து, கத்தியால் மணிகண்டனை சரமாரியாக வெட்டினர்.

முகம், கழுத்து, கை மற்றும் கால் என பல இடங்களில் வெட்டு காயங்களுடன் சாலையில் சரிந்த மணிகண்டனை, அங்கிருந்தவர்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

நள்ளிரவு 12:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார். கொலை சம்பவம் குறித்து, மாதவரம் பால் பண்ணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

இதில், மணிகண்டன், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரது மனைவியுடன் கள்ளக்காதலில் இருந்ததாகவும், ஜெயபிரகாஷ் எச்சரித்தும், மணிகண்டன் அதை பொருட்படுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயபிரகாஷ், நண்பர்களுடன் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. போலீசார், ஜெயபிரகாஷ் மற்றும் கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us