ADDED : மார் 17, 2024 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:தாம்பரம் அருகே மணிமங்கலம் அடுத்த ஆதனுாரைச் சேர்ந்தவர் கலையரசன், 25; கார் ஓட்டுனர். போதை பழக்கத்திற்கு அடிமையான இவர், இரு தினங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறினார்; பின் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் கலையரசனை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஆதனுாரில் உள்ள கால்வாயில் அவரது உடல் மிதந்தது. மணிமங்கலம் போலீசார் நேற்று முன்தினம் இரவு உடலை மீட்டனர். போதையில் கால்வாயில் தவறி விழுந்து, கலையரசன் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

