/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபர் இறப்பு உறவினர்களிடம் விசாரணை
/
வாலிபர் இறப்பு உறவினர்களிடம் விசாரணை
ADDED : மே 05, 2025 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கே.கே.நகரைச் சேர்ந்தவர் அஜித், 32. இவரது மனைவி ஆர்த்தி, 29, மத்திய பாதுகாப்பு படை அலுவலக ஊழியர்.
தம்பதிக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அஜித், கடந்த, 28ம் தேதி, கோட்டூர்புரத்தில் உள்ள பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இறந்தார். தற்கொலைக்கு முயற்சிக்கும் முன், தன் நண்பர் ஒருவருக்கு அஜித் அனுப்பிய வீடியோவில், 'நான் தற்கொலை முடிவை எடுப்பதற்கு, என் மனைவியின் உறவினர்கள் தான் காரணம்' என, கூறியுள்ளார்.
கோட்டூர்புரம் போலீசார், அஜித்தின் மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரிக்கின்றனர்.