sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தலைவர், து.தலைவர் பதவி பறிப்பு

/

தலைவர், து.தலைவர் பதவி பறிப்பு

தலைவர், து.தலைவர் பதவி பறிப்பு

தலைவர், து.தலைவர் பதவி பறிப்பு


ADDED : மே 02, 2025 12:20 AM

Google News

ADDED : மே 02, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் அருகே உள்ள மாம்பாக்கம் ஊராட்சி தலைவராக, 2021ல் அ.தி.மு.க.,வை சேர்ந்த வீராசாமி, தி.மு.க.,வைச் சேர்ந்த துணைத் தலைவர் லோகேஷ்வரி தேர்வாகினர்.

கவுன்சிலர்களின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக செயல்படுவது, நிதியில் முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, காசோலையில் கையெழுத்திடும் அவர்களின் அதிகாரம், 2023ல் பறிக்கப்பட்டது. இதுதொடர்பாக, வீராசாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

தொடர்ந்து, அக்., 14ல், ஊராட்சி தலைவர் வீராசாமியை பதவி நீக்கக்கோரி, வார்டு கவுன்சிலர்கள், ஊரக வளர்ச்சி துறை கமிஷனர் பொன்னையாவை சந்தித்து வலியுறுத்தினர். இதுசம்பந்தமாக விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில், த.வெ.க.,வுக்கு தாவிய வீராசாமி, தி.மு.க.,வைச் சேர்ந்த துணைத்தலைவர் லோகேஸ்வரி ஆகியோரை பதவியில் இருந்து நீக்கம் செய்து, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த பதவி நீக்கத்திற்கான அறிக்கை, தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் வந்துள்ளது.






      Dinamalar
      Follow us