/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அதிகாரிகள் சுருட்டி வைத்த விதிமீறல் பேனர்கள் அகற்றம்
/
அதிகாரிகள் சுருட்டி வைத்த விதிமீறல் பேனர்கள் அகற்றம்
அதிகாரிகள் சுருட்டி வைத்த விதிமீறல் பேனர்கள் அகற்றம்
அதிகாரிகள் சுருட்டி வைத்த விதிமீறல் பேனர்கள் அகற்றம்
ADDED : ஏப் 29, 2025 02:24 AM

சென்னை,நம் நாளிதழ் செய்தியை தொடர்ந்து, சென்னையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த விதிமீறல் பேனர்கள், நேற்று அதிரடியாக அகற்றப்பட்டன.
சென்னையில் விதிமீறல் பேனர்கள் அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருப்பது குறித்து, சமீபத்தில் நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, அனுமதி பெற்ற, பெறாத பேனர்கள் குறித்த பட்டியலை மாநகராட்சி தயாரித்தது.
தொடர்ந்து, விதிமீறல் பேனர்களை அதிரடியாக அகற்ற, சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டார்.
ஆங்காங்கே மாநகராட்சி பேனர்கள் அகற்றப்பட்டன. தேனாம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில், விளம்பர நிறுவனங்களிடம் வசூல் நடத்தும் நோக்கில், விதிமீறல் பேனர்களை முழுமையாக அகற்றாமல், அதிகாரிகள் ஆங்காங்கே சுருட்டி வைத்தனர்.
இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று, புகைப்படத்துடன் விரிவான செய்தி வெளியானது.
அதை தொடர்ந்து, மாநகராட்சி கமிஷனர் உத்தரவுப்படி, சுருட்டி வைக்கப்பட்ட பேனர்கள் அனைத்தும், நேற்று அதிரடியாக அகற்றப்பட்டன.