sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குடியரசு தின விழா கோலாகலம்:மாநகராட்சியில் சிறப்பாக பணி 140 அலுவலர்களுக்கு பதக்கம்

/

குடியரசு தின விழா கோலாகலம்:மாநகராட்சியில் சிறப்பாக பணி 140 அலுவலர்களுக்கு பதக்கம்

குடியரசு தின விழா கோலாகலம்:மாநகராட்சியில் சிறப்பாக பணி 140 அலுவலர்களுக்கு பதக்கம்

குடியரசு தின விழா கோலாகலம்:மாநகராட்சியில் சிறப்பாக பணி 140 அலுவலர்களுக்கு பதக்கம்


ADDED : ஜன 27, 2025 02:54 AM

Google News

ADDED : ஜன 27, 2025 02:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னையில் உள்ள மாநகராட்சி, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அலுவலங்களில், குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சென்னை மாநகராட்சி வளாகத்தில், மேயர் பிரியா தேசியக்கொடியேற்றி வைத்தார். கமிஷனர் குமரகுருபரன், மாநகராட்சி அலுவலர்களுக்கு, நவீன டிஜிட்டல் கம்பியில்லா பேசும் கருவிகள் வழங்கினார். சொத்து வரியை தாமதமின்றி செலுத்தியவர்களுக்கு, பாராட்டு கடிதம் வழங்கப்பட்டது. மாநகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த, 140 அலுவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், துணை மேயர் மகேஷ் குமார், துணை கமிஷனர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* கலெக்டர் அலுவலகம்

சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தேசிய கொடி ஏற்றி, மரியாதை செலுத்தினார். அரசுத்துறைகள் சார்பில், 52 பேருக்கு, 49.37 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து, சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.

* குடிநீர் வாரியம்

சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில், மேலாண்மை இயக்குனர் வினய், தேசிய கொடி ஏற்றினார். வாரியத்தில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணி புரிந்த, எட்டு பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கப்பட்டது. பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லுாரியில், தமிழ் துறை தலைவர் தங்கவேல் கொடியேற்றினார்.

* ஆவடி

ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், போலீஸ் கமிஷனர் சங்கர், தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். விழாவில், 110 போலீசாருக்கு முதல்வர் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பணியின் போது சிறப்பாக செயல்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் 21 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஆவடி மாநகராட்சி வளாகத்தில், ஆவடி மேயர் உதயகுமார், தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

திருவொற்றியூர்

திருவொற்றியூர் தாசில்தார் அலுவகத்தில், தாசில்தார் சகாயராணி தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். திருவொற்றியூர் மண்டல அலுவலக்தில், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தேசிய கொடியேற்றினார். இதில், உதவி கமிஷனர் புருஷோத்தமன், மண்டல செயற்பொறியாளர் பாபு உட்பட மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

மணலி அரசு மேல்நிலைப் பள்ளியில், திருவொற்றியூர் எம்.எல்.ஏ., - கே.பி.சங்கர் கொடியேற்றி மாணவ - மாணவியருக்கு, ஐஸ்கிரீம் வழங்கினார். மணலி மண்டல அலுவலகத்தில், மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தேசிய கொடியேற்றி வைத்தார்.

தேசிய கொடி ஏற்றிய துாய்மை பணியாளர்


பெரம்பூர் விவேகானந்தா பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில், 14 ஆண்டுகளாக பெரம்பூரில் துாய்மை பணி செய்து வரும் ஷிபா, தேசியக்கொடி ஏற்றி வைத்தார். துாய்மை பணியாளர்களை சிறப்பிக்கும் வகையில் நடந்த இந்நிகழ்வை, பலரும் வரவேற்றனர்.



சரக்கு கையாளுதலில்6 சதவீத வளர்ச்சி


சென்னை துறைமுகம் சார்பில், தண்டையார்பேட்டை ஸ்ரீபாபு ஜெகஜீவன் ராம் நினைவு விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. துறைமுக தலைவர் சுனில் பலிவால் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி: சென்னை துறைமுகத்தில் உள்ள பழைமையான ஆறு கப்பல் தளங்கள், 155 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புயல்களால் சேதமான, கடலோர சரக்குகளை கையாளும் கப்பல் தளம், 60 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட உள்ளது. துறைமுகத்தின் முதல் நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள கன்டெய்னர் லாரிகள் நிறுத்த வளாகம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.
ஏற்றுமதி சரக்குகளை கையாள, 44 கோடி ரூபாயில் கிடங்குகள்; திறந்த வெளி சரக்குகளை கையாள, 64 கோடி ரூபாயில் திறந்தவெளி யார்டு அமைக்கப்பட உள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பால் சென்னை துறைமுகத்தில் நிலக்கரி, இரும்பு தாது கையாளப்படுவது நிறுத்தப்பட்டு, சரக்குகளை கையாளும் அளவு குறைந்தது. அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர முயற்சியால், நடப்பாண்டில் சரக்குகளை கையாள்வதில், 6 சதவீத கூடுதல் வளர்ச்சி கிடைத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில், துறைமுக துணை தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us