sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வேளச்சேரி மகப்பேறு மருத்துவமனை மீண்டும் திறக்க வேண்டுகோள்

/

வேளச்சேரி மகப்பேறு மருத்துவமனை மீண்டும் திறக்க வேண்டுகோள்

வேளச்சேரி மகப்பேறு மருத்துவமனை மீண்டும் திறக்க வேண்டுகோள்

வேளச்சேரி மகப்பேறு மருத்துவமனை மீண்டும் திறக்க வேண்டுகோள்


ADDED : பிப் 28, 2024 12:44 AM

Google News

ADDED : பிப் 28, 2024 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளச்சேரி, அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி, சேவா நகரில், 1991ம் ஆண்டு உலக வங்கி நிதி உதவியில், மகப்பேறு மருத்துவமனை திறக்கப்பட்டது.

நவீன அறுவை சிகிச்சை வசதி, 30 படுக்கை வசதியுடன் செயல்பட்ட இந்த மருத்துவமனையை வேளச்சேரி, தரமணி சுற்றுவட்டார பகுதிமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், 2012ம் ஆண்டு, அறுவை சிகிச்சை இயந்திரங்கள், படுக்கைகள் உள்ளிட்டவை, அடையாறு மகப்பேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன.

அதன்பின், ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்பட்டு வருகிறது. வேளச்சேரி பகுதி, 175, 176, 177 மற்றும் 178 ஆகிய வார்டுகளை சேர்ந்தது.

இங்குள்ள கர்ப்பிணியர் அடையாறு, சைதாப்பேட்டை, ஆலந்துார் பகுதியிலுள்ள மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டி உள்ளது.

வேளச்சேரி அபார வளர்ச்சி அடைந்த பகுதியானாலும், ஏழை, நடுத்தர மக்கள் அதிகமாக வசிக்கின்றனர்.

இவர்களின் வசதிக்காக சேவா நகர், ஆரம்ப சுகாதார நிலையத்தை, மீண்டும் மகப்பேறு மருத்துவமனையாக மாற்ற, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேளச்சேரி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us