/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாரி கண்ணாடியை உடைத்த போதை ஆசாமிக்கு 'காப்பு'
/
லாரி கண்ணாடியை உடைத்த போதை ஆசாமிக்கு 'காப்பு'
ADDED : ஜன 22, 2026 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மதுபோதையில் ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டதுடன், கட்டையால் லாரி கண்ணாடியை உடைத்தவரை போலீசார் கைது செய்தனர்.
ம யிலாப்பூர், அம்பேத்கர் பாலம் பகுதியில் விறகு கடை நடத்தி வருபவர் சேர்மபாண்டி, 45. கடந்த 19ம் தேதி காலை, கடைக்கு தேவையான விறகு கட்டைகளை, லாரியில் இருந்து இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது, மதுபோதையில் வந்த நபர், கடைக்காரரிடம் வீண் தகராறு செய்ததுடன், விறகு கட்டையால் லாரி கண்ணாடியை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார்.
விசாரித்த மயிலாப்பூர் போலீசார், லாரி கண்ணாடியை உடைத்த மயிலாப்பூரைச் சேர்ந்த மதன், 46, என்பவரை நேற்று கைது செய்தனர். மதன் மீது ஏற்கனவே 10 வழக்குகள் உள்ளன.

