sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கீழ்க்கட்டளை ஏரிக்கரை சேதம் சீரமைக்காததால் வெள்ள அபாயம்

/

கீழ்க்கட்டளை ஏரிக்கரை சேதம் சீரமைக்காததால் வெள்ள அபாயம்

கீழ்க்கட்டளை ஏரிக்கரை சேதம் சீரமைக்காததால் வெள்ள அபாயம்

கீழ்க்கட்டளை ஏரிக்கரை சேதம் சீரமைக்காததால் வெள்ள அபாயம்


ADDED : அக் 21, 2024 03:15 AM

Google News

ADDED : அக் 21, 2024 03:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழ்க்கட்டளை:கீழ்க்கட்டளை ஏரி 100 ஏக்கர் பரப்புடையது. நீர்வரத்து பகுதிகளில் ஆக்கிரமிப்பு, ரேடியல் சாலை உருவாக்கம் ஆகியவற்றால் ஏரி இரண்டாக பிரித்து, 55.56 ஏக்கராக மாறியது.

கடந்தாண்டு மழையின்போது, இந்த ஏரி நிரம்பி வெளியேறிய உபரிநீர், சுற்றுப்புற குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. இதனால், தேன்மொழி நகர், ஸ்ரீஅம்பாள் நகர் உள்ளிட்ட பகுதி வீடுகள், வெள்ளத்தில் மூழ்கின.

இதையடுத்து, கீழ்க்கட்டளை ஏரியின் வடக்கு பக்க கரையை உயர்த்தி பலப்படுத்த வேண்டும் என, கடந்த ஆண்டு முதல், பாதிக்கப்பட்ட பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், சம்பந்தப்பட்டத் துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், சமீபத்திய கன மழையால், கீழ்க்கட்டளை ஏரி விரைவாக நிரம்பி வருகிறது.

அடுத்த சில நாட்கள் தொடர் மழை பெய்யும் பட்சத்தில், வடக்கு பக்க கரையில் உபரிநீர் வழிந்து, கடந்த ஆண்டை போலவே பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

அல்லது ஏரியின் கரை உடைந்தால், பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஏரியின் வடக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us