sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின் வாரிய அலட்சியத்தால் உயிர்பலி அபாயம்

/

மின் வாரிய அலட்சியத்தால் உயிர்பலி அபாயம்

மின் வாரிய அலட்சியத்தால் உயிர்பலி அபாயம்

மின் வாரிய அலட்சியத்தால் உயிர்பலி அபாயம்


ADDED : டிச 23, 2024 01:04 AM

Google News

ADDED : டிச 23, 2024 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர்:திரு.வி.க., நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பூர், மேட்டுப்பாளையம் அருந்ததி நகரில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். போலேரி அம்மன் தெரு உட்பட 16 தெருக்களை கொண்ட இப்பகுதியில், மின்வாரிய பணிகள் படுமோசமாக உள்ளன.

இங்குள்ள மின் பகிர்மானப் பெட்டிகளில் இருந்து, கண்டமேனிக்கு மின் ஒயர்கள் மூலம் மின் இணைப்புகள் குடியிருப்புகளுக்கு செல்கின்றன. திறந்து கிடக்கும் மின் பெட்டியில், 'யார் வேண்டுமானாலும் மின் இணைப்பு எடுத்துக் கொள்ளலாம்' என்ற அளவிலேயே பராமரிப்பு உள்ளது. உயர் மின் அழுத்தம் கொண்ட மின்சார ஒயர்கள் மின் பகிர்மானப் பெட்டிக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன.

இதனால், மழை நேரத்தில் உயிர் பலி ஏற்படும் ஆபத்து உள்ளது. கடந்த மாதம், ஆட்டுக்குட்டி ஒன்று மின்சாரம் தாக்கி இறந்தது.

பகுதி மக்கள் கூறுகையில், 'எங்களுக்கான மின்வாரிய பணிகளை கவனிக்க வேண்டிய அதிகாரிகளிடம் புகார் அளித்தால், அவர்கள் கேட்பதே இல்லை. கடந்த மழைக்கு கூட வீடுகளில் விளக்கு, 'டிவி' உள்ளிட்டவை, உயர் மின்னழுத்தத்தால் சேதமடைந்தனர். இங்கு போர்க்கால அடிப்படையில் மின்வாரியப் பணிகளை மேற்கொண்டால் மட்டுமே, உயிர் இழப்பில் இருந்து நாங்கள் தப்பிக்க முடியும்' என்றனர்.






      Dinamalar
      Follow us