sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குடியிருப்புகளின் மத்தியில் பாயும் கழிவுநீர் காசிமேடில் தொற்று நோய் பரவல் அபாயம்

/

குடியிருப்புகளின் மத்தியில் பாயும் கழிவுநீர் காசிமேடில் தொற்று நோய் பரவல் அபாயம்

குடியிருப்புகளின் மத்தியில் பாயும் கழிவுநீர் காசிமேடில் தொற்று நோய் பரவல் அபாயம்

குடியிருப்புகளின் மத்தியில் பாயும் கழிவுநீர் காசிமேடில் தொற்று நோய் பரவல் அபாயம்


ADDED : மார் 06, 2024 12:22 AM

Google News

ADDED : மார் 06, 2024 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காசிமேடு, காசிமேடு, ஜி.எம்.பேட்டையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், 2005ல் கட்டப்பட்டன. மூன்று மாடிகள் கொண்ட குடியிருப்புகளில், 552 வீடுகள் உள்ளன.

ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். தற்போது, இந்த வீடுகள் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளன. முறையாக குப்பை கழிவுகள் அகற்றப்படாததால், குடியிருப்புகளின் பின்புறம் உள்ள சிறிய இடத்தை, குடியிருப்புவாசிகள் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், மலை போல குப்பை தேங்கியுள்ளது. மேலும், வீடுகளில் இருந்து வெளியேறறப்படும்கழிவு நீரும் அங்கு பாய்ந்தோடி தேங்குகிறது. இதனால், கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

மர்ம காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்றுகளும் பரவி வருகின்றன. ஜி.எம்.பேட்டையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு மக்களின் நல்வாழ்விற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:

இங்கு, வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை கழிவுகளை கொட்ட, முறையான வழிகள் இன்றி உள்ளது. இதனால், வீடுகளில் சேரும் குப்பையை கொட்ட முறையான குப்பை தொட்டியும் இல்லை. குப்பையை சேகரிக்க ஆட்களும் சரிவர வருவதில்லை.

எனவே, வீட்டின் பின்புறமே ஆண்டுக்கணக்கில் பொதுமக்கள் குப்பை கொட்டுகின்றனர். மேலும், இங்கு கழிவுநீர் குழாய்கள் உடைந்து கழிவுநீர் தேங்கி குளம் போல் தேங்கி நிற்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இப்பகுதிக்கு, புதிதாக வரும் விருந்தினர்கள் வாந்தி எடுக்கும் அளவிற்கு, தாங்க முடியாத துர்நாற்றம் மற்றும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் வளாகமும் உள்ளது.

சர்வசாதாரணமாக உலா வரும் எலிகளும், கொசு, ஈக்கள் தொல்லையும் அதிகரித்துள்ளன. மழை பெய்தால், நிலைமை மிகவும் மோசமாக மாறி விடுகிறது. வாழவே முடியாத நிலை உள்ளது. கழிவு நீருடன் குப்பையும் வீட்டிற்குள் புகுந்து விடுகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us