sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி நரிக்குறவர்கள் சாலை மறியல்

/

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி நரிக்குறவர்கள் சாலை மறியல்

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி நரிக்குறவர்கள் சாலை மறியல்

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி நரிக்குறவர்கள் சாலை மறியல்


ADDED : நவ 19, 2024 12:20 AM

Google News

ADDED : நவ 19, 2024 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், சோழவரம் அருகே நரிக்குறவர் இன மக்களுக்கு வழங்கப்பட்ட, 45 ஏக்கர் நிலத்தை மீட்டு தரக்கோரி, கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தை அடுத்த ஒரக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட அல்லிமேடு பகுதியில், நரிக்குறவர் இன மக்களுக்கு, 1971ல், 45 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது. நரிக்குறவர்கள் பிழைப்பு தேடி வெளியூர் சென்றுவிட்டு, சில ஆண்டுகளுக்கு முன் ஊர் திரும்பினர்.

அப்போது, தனிநபர் ஒருவர், தனக்கு சொந்தமான பட்டா இடம் எனக் கூறி, சுற்றுச்சுவர் அமைக்க முயன்றார். அப்பகுதியில் திரண்ட நரிக்குறவர்கள் பணியை தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில், மீண்டும் அந்த இடத்தில் சுற்றுச்சுவர் அமைக்க முயற்சி செய்வதாக கூறி, 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்துடன், நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

போலீசார் அவர்களை தடுத்ததால் திடீரென, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, அவர்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். பின், 'ஆக்கிரமிக்கப்பட்ட தங்கள் நிலத்தை மீட்டுத் தரும் வரை, இங்கிருந்து செல்ல மாட்டோம்' எனக் கூறி, தர்ணாவில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். சிலரை மட்டும் கலெக்டரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர். அதன்பின், நரிக்குறவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால், கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us