ADDED : ஆக 18, 2025 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பியம்: திரு.வி.க.நகர், அன்பழகன் நகரைச் சேர்ந்தவர் ஷாஜகான், 42. பெரம்பூர் சுரங்கப்பாதை அருகே, மீன் விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மீன் வாங்குவதற்காக பட்டாளம் சந்தைக்கு சென்றார்.
அப்போது, பைக்கில் வந்த இருவர் ஷாஜகானை வழிமறித்து தாக்கி, 9,400 ரூபாயை பறித்து தப்பினர். இது குறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிந்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.