ADDED : செப் 18, 2024 06:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை வியாசர்பாடியில், ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை, போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இவர் மீது 5 கொலை வழக்குகள் உட்பட, 50க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அருண், பதவியேற்ற பின் நடக்கும், 2வது என்கவுண்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது.