sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

3 கொலை உட்பட 30 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சுட்டுக்கொலை! போலீசாரை வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் என்கவுன்டர்

/

3 கொலை உட்பட 30 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சுட்டுக்கொலை! போலீசாரை வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் என்கவுன்டர்

3 கொலை உட்பட 30 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சுட்டுக்கொலை! போலீசாரை வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் என்கவுன்டர்

3 கொலை உட்பட 30 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சுட்டுக்கொலை! போலீசாரை வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் என்கவுன்டர்

4


UPDATED : மார் 17, 2026 10:19 AM

ADDED : மார் 17, 2026 05:31 AM

Google News

UPDATED : மார் 17, 2026 10:19 AM ADDED : மார் 17, 2026 05:31 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் மூன்று கொலை வழக்குகள் உட்பட 30 வழக்குகளில் பிரதான குற்றவாளியான 'தொப்பை' கணேசன் நேற்று போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். மாதவரத்தில் பதுங்கியிருந்தவரை பிடிக்க சென்ற போலீசாரில் இருவரை கத்தியால் வெட்டியதால், போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். சென்னை, வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்தவர் கணேசன், 38; ரவுடி. இவர், 'டில்லி' கணேஷ், 'தொப்பை' கணேசன் ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டவர்; திருமணம் ஆகாதவர்.

கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், சென்னை மாநகர போலீசில், 'ஏ - பிளஸ் கேட்டகரி' ரவுடி பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.

இவர் மீது, மூன்று கொலைகள், ஏழு கொலை முயற்சி, 14 கொள்ளை வழக்குகள் என, வியாசர்பாடி, கொடுங்கையூர், எம்.கே.பி., நகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில், 30 வழக்குகள் உள்ளன.

திருட்டு கைவந்த கலை கடந்த ஜன., 30ம் தேதி, புழல் மஹாவீர் கார்டன் பகுதியைச் சேர்ந்த, ஜவுளி வர்த்தகர் விஜயகுமார், அவரது மனைவி வசந்தா உட்பட ஐந்து பேரை, வீடு புகுந்து கட்டிப் போட்டு, கத்தி முனையில் முகமூடி கொள்ளையர்கள், 50 லட்சம் ரூபாய், 25 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றனர்.

இது தொடர்பாக, தனிப்படை போலீசார் விசாரித்து, எண்ணுார் பெரிய காசி கோவில் தெருவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராகுல், 28, உள்ளிட்டோரை கைது செய்தனர்.

இவர்கள் அளித்த வாக்குமூலத்தில், கொள்ளை சம்பவத்தின் மூளையாக, 'தொப்பை' கணேசன் செயல்பட்டது தெரியவந்தது. 'கூட்டுக்கொள்ளையில் ஈடுபடுவது கணேசனுக்கு கைவந்த கலை' என, போலீசார் தெரிவிக்கின்றனர்.

ஜவுளி வர்த்தகர் விஜயகுமாரின் குடும்பத்தினரை கட்டிப்போட்டு, நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில், கணேசனின் பெயர் சேர்க்கப்பட்டு, தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், சென்னை மாதவரம் சின்ன ரவுண்டானா அருகே, கட்டுமான பணிகள் பாதியில் கைவிடப்பட்ட பழைய கட்டடத்தில், கணேசன் பதுங்கி இருப்பதாக, தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திரு.வி.க., நகர் இன்ஸ்பெக்டர் பூபதிராஜ், எஸ்.ஐ., சுப்ரமணி, 43, ஏட்டு தினேஷ்குமார், 37, ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார், நேற்று காலை கணேசனை சுற்றி வளைத்து, கைது செய்ய முயன்றனர்.

நெஞ்சில் பாய்ந்தது அப்போது, கணேசன் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீசாரை வெட்டினார். இதில், எஸ்.ஐ., சுப்ரமணி, ஏட்டு தினேஷ்குமார் ஆகியோர் காயமடைந்தனர்.

தொடர்ந்து, இன்ஸ் பெக்டர் பூபதிராஜையும், கணேசன் வெட்ட முற்பட்டார். சுதாரித்த அவர், தற்காப்புக்காக சுட்டதில், மார்பில் மூன்று குண்டுகள் பாய்ந்த கணேசன், சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

உடனடியாக அவரை, அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் சேர்த்தனர். டாக்டர்களின் பரிசோதனையில் கணேசன் உயிரிழந்தது தெரிய வந்தது.

காயமடைந்த எஸ்.ஐ., மற்றும் ஏட்டு ஆகியோரும், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீசார் நடத்திய என்கவுன்டரில் கணேசன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக, மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

யார் இந்த கணேசன்?

கடந்த, 1990களில் வட சென்னையை ஆட்டிப்படைத்து வந்த ரவுடி சேராவின் நெருங்கிய கூட்டாளியாக செயல்பட்டு வந்தார். கடந்தாண்டு, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி யில் அறிவழகன் என்பவர் மீது, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி, அவரை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி, மற்றொரு வழக்கில் கணேசனும் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த பின், கணேசன் தலைமறைவாக இருந்து, ரவுடி யி சம், கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். சட்டசபை தேர்தல் அறிவித்த மறுநாளே என்கவுன்டரில் ரவுடி கணேசனை சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது, பேசு பொருளாக மாறிவிட்டது.



இது 6வது 'என்கவுன்டர்'

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் பொறுப்பேற்ற பின், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம், போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின், ரவுடி காக்கா தோப்பு பாலாஜி, செயின் பறிப்பில் ஈடுபட்டு அட்டூழியம் செய்த, மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஈரானிய கொள்ளையர்கள் இருவர், தென் சென்னை ரவுடி சீசிங் ராஜா ஆகியோரும் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். தற்போது ஆறாவதாக, ரவுடி தொப்பை கணேசன் என்கவுன்டரில் கொல்லப்பட்டு உள்ளார்.








      Dinamalar
      Follow us