sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.5,000 வழிப்பறி வழக்கில் ரவுடி பாம் சரவணன் கைது

/

ரூ.5,000 வழிப்பறி வழக்கில் ரவுடி பாம் சரவணன் கைது

ரூ.5,000 வழிப்பறி வழக்கில் ரவுடி பாம் சரவணன் கைது

ரூ.5,000 வழிப்பறி வழக்கில் ரவுடி பாம் சரவணன் கைது


ADDED : ஏப் 30, 2025 12:35 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, வழிப்பறி வழக்கில், ரவுடி பாம் சரவணன் கைது செய்யப்பட்டார்.

புளியந்தோப்பு வெங்கடேசபுரத்தைச் சேர்ந்தவர் ரவடி பாம் சரவணன், 41. வெடிகுண்டுகளை தயாரித்து வீசுவதில் கெட்டிக்காரர் என்பதால், போலீசார் மற்றும் ரவுடிகள் இவரை, 'பாம்' சரவணன் என, அழைக்கின்றனர்.

இவர் மீது, ஆறு கொலைகள் உட்பட, 26க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

கடந்தாண்டு ஜூலையில் கொலை செய்யப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் வலது கரமாக செயல்பட்டு வந்தார்.

கடந்த 2018ல், ரவுடி நாகேந்திரன் கூட்டாளிகளை கொலை செய்த வழக்கில் தலைமறைவான பாம் சரணவன், ஆந்திராவில் பதுங்கி இருந்தபோது, தனிப்படை போலீசார், காலில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் மீது, கொடுங்கையூரைச் சேர்ந்த நடராஜன், 51 என்பவரிடம், கத்தியை காட்டி மிரட்டி, 5,000 ரூபாய் வழிப்பறி செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இவ்வழக்கில், கொடுங்கையூர் போலீசாரால் நேற்று, பாம் சரவணனை கைது செய்தனர். அவரது கூட்டாளி ராஜேஷ், 37 என்பவரை தேடி வருகின்றனர்.

***






      Dinamalar
      Follow us