sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.10 லட்சம் மோசடி: பெரம்பூர் நபர் கைது

/

ரூ.10 லட்சம் மோசடி: பெரம்பூர் நபர் கைது

ரூ.10 லட்சம் மோசடி: பெரம்பூர் நபர் கைது

ரூ.10 லட்சம் மோசடி: பெரம்பூர் நபர் கைது


ADDED : செப் 10, 2025 12:23 AM

Google News

ADDED : செப் 10, 2025 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர், :இரட்டிப்பு லாபம் ஆசைகாட்டி, 10 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூரைச் சேர்ந்தவர் ஷபியா, 34. இவரது கணவர் மூலம், கொடுங்கையூரில் பிளாஸ்டிக் நிறுவனம் நடத்தி வரும் பாடியநல்லுாரைச் சேர்ந்த முகமது பர்ஹதுல்லா, 37, என்பவர் அறிமுகமானார்.

இவர், ஷபியா விடம் தொழிலில் ஐந்து லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 25,000 ரூபாய் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதை நம்பி, 2021 டிசம்பர் மாதம் ஷபியா, ஐந்து லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். துவக்கத்தில், ஓரிரு மாதங்கள் 25,000 ரூபாய் முகமது பர்ஹதுல்லா முறையாக கொடுத்துள்ளார்.

இதையடுத்து, 2022ம் ஆண்டு, மேலும் 5 லட்சம் ரூபாயை ஷபியா கொடுத்துள்ளார்.

ஆனால், அதன்பின் மாத தவணையை பர்ஹதுல்லா கொடுக்க வில்லை. அவரை தேடி சென்றபோது தலைமறைவானது தெரிய வந்தது.

இது குறித்து 2023ம் ஆண்டு திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது.

விசாரித்த போலீசார், இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த முகமது பர்ஹதுல்லாவை, நேற்று முன் தினம் கைது செய்து சி றையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us