sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

/

சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்


ADDED : ஜூலை 07, 2025 03:42 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்: திருவொற்றியூர், பீர்பயில்வான் தர்கா பகுதியைச் சேர்ந்த அல்தாப்பின் மகன் நவ்பல், 17; பிளஸ் 2 மாணவர். கடந்த 2ம் தேதி டியூஷன் சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது, வீட்டருகே தேங்கிய மழைநீரில் கசிந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இந்நிலையில், 'அலட்சியமாக செயல்பட்ட மின்வாரிய அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்' எனக்கோரி, அப்பகுதி மக்கள் மறியல், போராட்டம் நடத்தினர்.

மின்வாரியத்தின் அலட்சியம் குறித்து கண்டனம் தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்கள், நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தினர்.

அதன்படி, மின்வாரியம் சார்பில் நிவாரணமாக, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சங்கர், உயிரிழந்த மாணவர் நவ்பலின் தந்தை அல்தாபிடம் நேற்று வழங்கினார்.






      Dinamalar
      Follow us