/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆம்னி பஸ்சில் ரூ.1.25 கோடி பறிமுதல்
/
ஆம்னி பஸ்சில் ரூ.1.25 கோடி பறிமுதல்
ADDED : செப் 07, 2025 01:57 AM
கும்மிடிப்பூண்டி, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில், மாநில எல்லையோர சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இங்கு, காஞ்சிபுரம் போதை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், நேற்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்தை நிறுத்தி, பயணியரின் உடமை களை சோதனையிட்டனர்.
அதில் பயணித்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன், 29, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித்குமார், 26, ஆகியோர், உரிய ஆவணங்கள் இன்றி, 1.25 கோடி ரூபாய் எடுத்து வந்தது தெரியவந்தது.
பணத்தை பறிமுதல் செய்த போலீசார், சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித் துறையிடம் ஒப்படைத்தனர்.