sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சொத்து வரிக்கு ரூ.2,000 லஞ்சம் 'மாஜி' ஊழியருக்கு 4 ஆண்டு

/

சொத்து வரிக்கு ரூ.2,000 லஞ்சம் 'மாஜி' ஊழியருக்கு 4 ஆண்டு

சொத்து வரிக்கு ரூ.2,000 லஞ்சம் 'மாஜி' ஊழியருக்கு 4 ஆண்டு

சொத்து வரிக்கு ரூ.2,000 லஞ்சம் 'மாஜி' ஊழியருக்கு 4 ஆண்டு


ADDED : அக் 30, 2024 12:08 AM

Google News

ADDED : அக் 30, 2024 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் :திருவள்ளூர் மாவட்டம், ஆவடி - - பூந்தமல்லி சாலை, பருத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பகத்சிங், 43. இவர், தன் வீட்டிற்கு சொத்து வரி செலுத்த, ஆவடி நகராட்சி அலுவலகத்தில் 2014ல் விண்ணப்பித்தார். அப்போது வருவாய் உதவியாளராக இருந்த ராமு, 61, என்பவர், 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் தர விரும்பாத பகத்சிங், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனைபடி, பக்தசிங் கொடுத்த ரசாயன தடவிய 2,000 ரூபாய் நோட்டுகளை, ஏழுமலை என்பவர் வாங்கினார்.

அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது, லஞ்ச பணத்தை ராமு வாங்க சொன்னதாக தெரிவித்தார். இதையடுத்து, வருவாய் உதவியாளர் ராமுவை, போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் சிறப்பு நீதிமன்றத்தில், ராமு மீது 2015ல் வழக்கு தொடரப்பட்டது. இதில் அரசு தரப்பில் வழக்கறிஞர் அமுதா ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில், நேற்று முன்தினம் நீதிபதி மோகன் தீர்ப்பு வழங்கினார்.

வீட்டுக்கு சொத்து வரி விதிப்பதற்காக ஆவடி நகராட்சி வருவாய் ஆய்வாளர் ராமு, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டு, அவருக்கு நான்கு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 20,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us