/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மருத்துவமனைகளுக்கு ரூ.30 லட்சம் உபகரணம்
/
மருத்துவமனைகளுக்கு ரூ.30 லட்சம் உபகரணம்
ADDED : ஏப் 15, 2025 11:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி, சென்னை உயர்நீதிமன்றம் சார்பில், பூந்தமல்லி அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா, பூந்தமல்லியில் உள்ள பொது சுகாதார நிறுவனத்தில் நேற்று நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தலைமை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எஸ். சுந்தர், மருத்துவமனைக்கு, 30 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்வில், நீதிபதிகள் டி.லிங்கேஸ்வரன், ஜே.ஜூலியட்புஷ்பா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

