sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

லேடீஸ் கிளப் வசமிருந்த ரூ.8 கோடி இடம் மீட்பு

/

லேடீஸ் கிளப் வசமிருந்த ரூ.8 கோடி இடம் மீட்பு

லேடீஸ் கிளப் வசமிருந்த ரூ.8 கோடி இடம் மீட்பு

லேடீஸ் கிளப் வசமிருந்த ரூ.8 கோடி இடம் மீட்பு

1


UPDATED : ஜூலை 20, 2025 08:31 AM

ADDED : ஜூலை 20, 2025 07:52 AM

Google News

UPDATED : ஜூலை 20, 2025 08:31 AM ADDED : ஜூலை 20, 2025 07:52 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர்: அண்ணா நகரில், 8 கோடி ரூபாய் மதிப்பிலான மாநகராட்சி இடத்தை, அதிகாரிகள் நேற்று மீட்டனர்.

அண்ணா நகர் கிழக்கு, குமரன் நகர் மூன்றாவது குறுக்கு தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான 5,000 சதுரடி இடம், 'அண்ணா நகர் லேடீஸ் கிளப்'புக்கு, 30 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டிருந்தது.

நான்கு ஆண்டுகளுக்கு முன் குத்தகை காலம் முடிந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், கிளப்பை சேர்ந்தோரை வெளியேறும்படி தெரிவித்தனர்.





அவர்கள் காலி செய்ததை அடுத்து, மண்டல அதிகாரி சுந்தரராஜன் தலைமையிலான மாநகராட்சியினர் நேற்று அந்த இடத்தை மீட்டு, பூட்டு போட்டனர். இந்த இடத்தில் அத்துமீறி நுழைந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை பதாகை அமைத்துள்ளனர்.

மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு 8 கோடி ரூபாய் என மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us