sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.9.50 கோடி கஞ்சா; ஏர்போர்ட்டில் பறிமுதல்

/

ரூ.9.50 கோடி கஞ்சா; ஏர்போர்ட்டில் பறிமுதல்

ரூ.9.50 கோடி கஞ்சா; ஏர்போர்ட்டில் பறிமுதல்

ரூ.9.50 கோடி கஞ்சா; ஏர்போர்ட்டில் பறிமுதல்


ADDED : அக் 10, 2025 07:53 AM

Google News

ADDED : அக் 10, 2025 07:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; தாய்லாந்து நாட்டில் இருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 9.50 கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக கஞ்சாவை, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து, 'தாய் ஏர்லைன்ஸ்' விமானம், சென்னை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்தது.

அதில் வந்த வடமாநில பயணியை நிறுத்தி, அவரது உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்ததில், உணவு பொருட்கள் பாக்கெட்டில் 7.5 கிலோ உயர் ரக கஞ்சா கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு, 7.50 கோடி ரூபாய்.

இதேபோல் பாங்காக்கில் இருந்து 'இண்டிகோ' விமானம் வந்தது. அதில் வந்த இரு பயணியரை சோதனை செய்ததில், 2 கிலோ உயர் ரக கஞ்சா இருப்பது உறுதியானது. அதன் மதிப்பு, 2 கோடி ரூபாய்.

பிடிபட்ட மூன்று பேரும், போதை பொருட்களை கடத்தி சப்ளை செய்யும் கும்பல்களைச் சேர்ந்தோர் என தெரிய வந்துள்ளது. மூன்று பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த கடத்தலில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us