ADDED : ஜூலை 09, 2025 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி மாநகராட்சி, பெரியார் நகர், நாசர் தெருவில் உள்ள ஆழ்துளை கிணறு கை பம்ப் செயல்பாட்டில் இருந்தது. கடந்த வாரம் அந்த தெருவில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.
அப்போது, சிமென்ட் கலவை கொட்டி கை பம்பை மூடி விட்டனர். இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, கை 'பம்ப்' மீண்டும் உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது.