/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாய்மை பணி தனியார் மயம் அ.தி.மு.க., மனித சங்கிலி
/
துாய்மை பணி தனியார் மயம் அ.தி.மு.க., மனித சங்கிலி
ADDED : ஜூலை 17, 2025 12:21 AM

தண்டையார்பேட்டை,வடசென்னையில் துாய்மை பணியை தனியாருக்கு மாற்றும் தி.மு.க., அரசை கண்டித்தும், தற்காலிக பணியிடங்களை நிரந்தரமாக்க வலியுறுத்தியும், அ.தி.மு.க., சார்பில், தண்டையார்பேட்டையில் நேற்று மாலை, மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலர் டாக்டர் பரமசிவம், வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் துவங்கி, சுங்கச்சாவடி வரை, அ.தி.மு.க.,வினர் நுாற்றுக்கணக்கனோர் பதாகைகளை ஏந்தியபடி, மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

