ADDED : ஆக 13, 2026 10:04 PM
அ நிறம் | அளவு
சென்னை, ஆக. 14–
பணி நிரந்தரம் கோரி, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் நேற்று பேரணி நடத்தினர்.
சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வரும், உழைப்போர் உரிமை இயக்கத்தை சேர்ந்த துாய்மை பணியாளர்கள் 400 பேர் நேற்று, சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து, கோட்டை நோக்கி நேற்று பேரணி சென்றனர்.
பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வீடு ஒதுக்கித்தருவதோடு, மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். குப்பை அகற்றுதலை இயந்திரமயமாக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தினர்.
