ADDED : ஆக 17, 2025 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவேற்காடு, நெடுஞ்சாலையை கடக்க முயன்ற தனியார் நிறுவன காவலாளி, பைக் மோதி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 58; தனியார் நிறுவன காவலாளி. இவர், திருவேற்காடு அடுத்த காடுவெட்டி பகுதியில், ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையை நேற்று காலை கடந்தபோது, ஆவடி நோக்கி வேகமாக சென்ற 'ஹோண்டா சி.பி.இசட்' பைக் மோதி துாக்கி வீசப்பட்டார். இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்படுத்திய ஆவடி, அண்ணாமலை நகரைச் சேர்ந்த மனோஜ் குமார், 41, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
மனோஜ் குமார், ஆவடியில் உள்ள சி.வி.ஆர்.டி.இ., எனும் மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.