ADDED : பிப் 14, 2026 05:32 AM
கோயம்பேடு: காதலர் தினத்தையொட்டி கோயம்பேடு பூ சந்தையில், ரோஜா பூக்கள் விற்பனை அமோகமாக நடந்தது.
கோயம்பேடு சந்தைக்கு ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ரோஜா பூக்கள் வரத்து உள்ளது. தினமும், 6 டன் ரோஜா பூக்கள் வரும் இடத்தில், காதலர் தினத்தையடுத்து, 12 டன் ரோஜா பூக்கள் வந்தன. விற்பனையும் ஜோராக நடந்தது.
இதில், பஞ்ச் ரோஸ் எனப்படும், 20 மொட்டு ரோஜா பூக்கள் கொண்ட ஒரு கட்டு, 450 - 500 ரூபாய்க்கும்; 20 மலர்ந்த ரோஜா பூக்கள் கொண்ட ஒரு கட்டு, 150 -200 ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும், பன்னீர் ரோஜா கிலோ 120; சாக்லேட் ரோஜா - 100 - 120; மல்லி -1,500 - 1,800; கனகாம்பரம் 400 -- 500, ஜாதி - 1,500, சாமந்தி - 140 - 160 ரூபாயக்கும் விற்பனையானது.
சனி பிரதோசம், சிவராத்திரி அடுத்தடுத்து வருவதால், மலர் சந்தையில் வியாபாரம் கன ஜோராக நடந்தது.

