ADDED : ஆக 16, 2025 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆலந்துார்: ஆலந்துார் எம்.கே.என்., சாலையில் கண்காணிப்பில் இருந்த போலீசார், நேற்று முன்தினம் அப்பகுதியில் சுற்றிய, 17 வயது சிறுவன் வைத்திருந்த பையில் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிகுதல் செய்தனர்.
அவன் அளித்த தகவலின்படி, சிவகங்கையை சேர்ந்த சரவணன், 40, பிரகாஷ், 22, அந்தமான் - நிக்கோபார் தீவை சேர்ந்த லட்சுமணன், 19, திருச்சியை சேர்ந்த ஆனந்த்குமார், 32, கணேஷ், 28, அசோக்குமார், 26, ஆகியோரை, பல்வேறு பகுதிகளுக்கு சென்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 38 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

