sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மழைநீர் வடிகால்வாய் பணியால் போரூர் ஏரியில் கலக்கும் கழிவுநீர்

/

மழைநீர் வடிகால்வாய் பணியால் போரூர் ஏரியில் கலக்கும் கழிவுநீர்

மழைநீர் வடிகால்வாய் பணியால் போரூர் ஏரியில் கலக்கும் கழிவுநீர்

மழைநீர் வடிகால்வாய் பணியால் போரூர் ஏரியில் கலக்கும் கழிவுநீர்


ADDED : நவ 10, 2025 01:41 AM

Google News

ADDED : நவ 10, 2025 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அய்யப்பன்தாங்கல்: சென்னைக்கு அருகே அய்யப்பன்தாங்கல் ஊராட்சி உள்ளது. மொத்தம், 15 வார்டுகள் கொண்ட அந்த ஊராட்சியில், 25,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

அங்கு மழைநீர் வடிகால்வாய், பாதாளச் சாக்கடை வசதி இல்லை. இதனால், ஒவ்வொரு ஆண்டு மழைக்கும், அய்யப்பன்தாங்கல் ஊராட்சி முழுதும் பாதிக்கப்படும்.

குறிப்பாக, அய்யப் பன்தாங்கல் இ.வி.பி., பிரபு அவென்யுவில் உள்ள 1, 2, 3வது சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து, அப்பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது. அதை, அய்யப்பன்தாங்கல் யூனியன் சாலையில் உள்ள மழைநீர் வடிகாலில் இணைக்கப்பட்டது.

இதற்காக, அய்யப்பன்தாங்கல் யூனியன் சாலையில் உள்ள சிறிய மழைநீர் வடிகால்வாயை உடைத்து, பெரிய மழைநீர் வடிகால்வாயாக அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக கால்வாயின் நீரோட்டம் தடை செய்யப்பட்டது. இந்த நிலையில்ல கால்வாயில் வரும் கழிவுநீர், தனியார் நிலம் வழியாக, போரூர் ஏரியில் செல்லும் வரத்து கால்வாயான தந்தி கால்வாயில் கலந்து வருகிறது. இதனால், சென்னையின் நீர் ஆதாரமான போரூர் ஏரியில் கழிவுநீர் கலந்து வருகிறது.

இதனால், போரூர் ஏரி நீர் மாசடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us