sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காலி இடத்தில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சுகாதார சீர்கேடு

/

காலி இடத்தில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சுகாதார சீர்கேடு

காலி இடத்தில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சுகாதார சீர்கேடு

காலி இடத்தில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சுகாதார சீர்கேடு


ADDED : நவ 18, 2024 02:26 AM

Google News

ADDED : நவ 18, 2024 02:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அய்யப்பன்தாங்கல்:அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் உள்ள காலி இடத்தில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியுள்ளதால், சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.

அய்யப்பன்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட மவுன்ட் -- பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் ஆயில்மில் சாலையில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. சில நாட்களாக பெய்த மழையில், அடுக்குமாடி குடியிருப்பு அருகே உள்ள காலி இடத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.

தேங்கிய மழைநீரில், கழிவுநீர் கலந்து அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன், கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அய்யப்பன்தாங்கல் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தால், நிலத்தின் உரிமையாளரிடம் தகவல் தெரிவிக்கும் படி பதில் கூறியுள்ளனர். அப்பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர் கேடை நீக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us