/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் தேங்கும் கழிவுநீரால் சூளைமேடில் சுகாதார சீர்கேடு
/
சாலையில் தேங்கும் கழிவுநீரால் சூளைமேடில் சுகாதார சீர்கேடு
சாலையில் தேங்கும் கழிவுநீரால் சூளைமேடில் சுகாதார சீர்கேடு
சாலையில் தேங்கும் கழிவுநீரால் சூளைமேடில் சுகாதார சீர்கேடு
ADDED : நவ 19, 2024 12:33 AM

சூளைமேடு பகுதியில் உள்ள சவுராஷ்டிரா நகரில், 10க்கு மேற்பட்ட தெருக்களில், ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இதில், ஒன்றாவது தெருவில், நுங்கம்பாக்கம் ரயில் நிலையமும் செயல்படுகிறது. இந்த நிலையத்தை, அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் வசிப்போரும் பயன்படுத்தி வருகின்றனர். ரயில் நிலையம் அமைந்துள்ள முதல் தெருவோரத்தில், பல நாட்களாக கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. பாதாள சாக்கடை நிரம்புவதால், இயந்திரக்குழியில் கழிவுநீர் பொங்கி சாலையில் வழிந்தோடுகிறது.
இப்பகுதியில் அடிக்கடி இப்பிரச்னை ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மாசிமுத்து, சவுராஷ்டிரா நகர்.

