ADDED : மார் 15, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சைதாப்பேட்டை, பிராமின் சந்தில் உள்ள ஒரு வீட்டில், பாலியல் தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் ஆய்வு நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த கிரீஷ், 52, என்பவர், பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார், அவரிடம் சிக்கியிருந்த இரண்டு பெண்களை மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

