sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ஷாக்! ஒரே நாளில் ரூ.100 உயர்ந்த முருங்கைக்காய்

/

 ஷாக்! ஒரே நாளில் ரூ.100 உயர்ந்த முருங்கைக்காய்

 ஷாக்! ஒரே நாளில் ரூ.100 உயர்ந்த முருங்கைக்காய்

 ஷாக்! ஒரே நாளில் ரூ.100 உயர்ந்த முருங்கைக்காய்


ADDED : நவ 25, 2025 05:00 AM

Google News

ADDED : நவ 25, 2025 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயம்பேடு: முருங்கைக்காய் ஒரு கிலோ நேற்று முன்தினம் 300 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், நேற்று ஒரே நாளில் 100 ரூபாய் அதிகரித்து, 400 ரூபாய்க்கு விற்பனையானது.

கோயம்பேடு சந்தைக்கு பெரம்பலுார், ஒட்டன்சத்திரம், தேனி, நெல்லை, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, முருங்கைக்காய் வரத்து உள்ளது.

ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை, முருங்கைக்காய் சீசன் உள்ளது. தற்போது சீசன் முடிந்ததால், முருங்கைக்காய் வரத்து குறைந்து, விலை அதிகரித்து வருகிறது.

மொத்த விற்பனையில், நேற்று முன்தினம் ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு முருங்கைக்காய் 45 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 100 ரூபாய் அதிகரித்து, கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையானது.

இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், சில்லரை விற்பனை கடைகளில் முருங்கைக்காய் விலையை கேட்டு, அவற்றை வாங்காமல் அதிர்ச்சியுடன் மக்கள் செல்கின்றனர். ஹோட்டல்கள், கேன்டீன்கள், விசேஷ நிகழ்ச்சிகளில் சாம்பார் உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிப்பதற்கு முருங்கைக்காய் பயன்படுத்துவதும் தவிர்க்கப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us