sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நீதிபதி முன் செருப்பு வீச்சு கோர்ட்டில் ரவுடி ரகளை

/

நீதிபதி முன் செருப்பு வீச்சு கோர்ட்டில் ரவுடி ரகளை

நீதிபதி முன் செருப்பு வீச்சு கோர்ட்டில் ரவுடி ரகளை

நீதிபதி முன் செருப்பு வீச்சு கோர்ட்டில் ரவுடி ரகளை


ADDED : ஜன 29, 2025 12:39 AM

Google News

ADDED : ஜன 29, 2025 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன், கடந்தாண்டு அக்., 25ம் தேதி பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர், தேனாம்பேட்டையைச் சேர்ந்த கருக்கா வினோத், 42.

பயங்கரவாதிகளுடன் இவருக்கு தொடர்பு இருக்கும் என சந்தேகம் எழுந்ததால், இந்த வழக்கை என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், வழக்கு விசாரணைக்காக புழல் சிறையில் இருந்து கருக்கா வினோத், நேற்று அழைத்து வரப்பட்டார்.

நீதிமன்ற கூண்டில் நின்ற கருக்கா வினோத், 'தன்னை ஜாமினில் வெளியே விட வேண்டும்' என, ஆவேசமாகப் பேசி தன் காலில் கிடந்த செருப்பை கழற்றி, ஒன்றன்பின் ஒன்றாக நீதிபதி முன் வீசினார்.

ஒரு செருப்பு, நீதிபதியின் மேசை மீது விழுந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கருக்கா வினோத் மீதான வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டி, நீதிபதி விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கருக்கா வினோத் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us