sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஊறுகாய்க்காக கத்திக்குத்து கோடம்பாக்கத்தில் கடை சூறை

/

ஊறுகாய்க்காக கத்திக்குத்து கோடம்பாக்கத்தில் கடை சூறை

ஊறுகாய்க்காக கத்திக்குத்து கோடம்பாக்கத்தில் கடை சூறை

ஊறுகாய்க்காக கத்திக்குத்து கோடம்பாக்கத்தில் கடை சூறை


ADDED : அக் 09, 2024 12:25 AM

Google News

ADDED : அக் 09, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோடம்பாக்கம், கோடம்பாக்கம், காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் அசாருதீன், 34. இவரது சகோதரர் முகமது உசேன், 28. இருவரும், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர்.

அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர், அசாருதீன் கடைக்கு நேற்று முன்தினம் இரவு சென்று, 1 ரூபாய் ஊறுகாய் பாக்கெட் கேட்டுள்ளார்.

அப்போது, 1 ரூபாய்க்கு பாக்கெட் இல்லை, 5 ரூபாய் ஊறுகாய் பாக்கெட் மட்டுமே உள்ளதாக, அசாருதீன் கூறியுள்ளார். இதனால், வினோத் - அசாருதீன் இடையே தகராறு ஏற்பட்டது.

பின்னர், அங்கிருந்து சென்ற வினோத், 30, தன் நண்பர்கள் கலையரசன், 32, மற்றும் இரண்டு பேரை அழைத்து வந்து, அசாருதீனுடன் அடிதடியில் ஈடுபட்டுள்ளார்; மளிகை கடையையும் அடித்து உடைத்துள்ளார்.

சிறிய கத்தியால் அசாருதீன் தலையில் குத்தி, நால்வரும் தப்பிச் சென்றனர். இதையடுத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அசாருதீன் அனுமதிக்கப்பட்டு, தலையில் ஆறு தையல்கள் போடப்பட்டன.

இதுகுறித்து, கோடம்பாக்கம் போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரித்தனர். அவர்கள், புகார் தேவையில்லை சமாதானமாக செல்வதாக எழுதி கொடுத்துச் சென்றனர்.






      Dinamalar
      Follow us